கொள்கைகள்
  • 1. மக்கள் அனைவருக்கும் அரசியல் சுதந்திரம் வேண்டும் (Political Independence). அதற்கு EVM வாக்கு எந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டு முறையில் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும்.
  • 2. MP, MLA-க்கள் நேர்மையானவர்களாக, மக்களின் நலன், நாட்டின் நலன் பற்றியே எந்நேரமும் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக தனக்கென சொத்து சேர்க்கும் ஆசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மையான ஆட்சி நடைபெறும். எனவே சொத்து சேர்க்கும் ஆசை இல்லாதவர்கள் மட்டுமே MP, MLA ஆக முடியும் என்ற விதத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
  • 3. மக்கள் அனைவருக்கும் பொருளாதார சுதந்திரம் வேண்டும் (Economic Independence). இதற்கு 'மக்கள் உடைமை பொருளாதாரக் கொள்கை' நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரவேண்டும்.

    நம் நாட்டில் ஒரு சிலரிடம் மிகப்பெரும் அளவுக்கு செல்வம் குவிந்துள்ளது. ஆனால் மிகப் பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்தில் அடிமை நிலையில் தான் உள்ளனர். பொருளாதார பலம் உள்ளவர்களிடமே ஆட்சி அதிகாரம் இருப்பதால் அரசின் கொள்கைகள் அனைத்தும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கே சாதகமாக தனி உடைமைக் கொள்கையை ஊக்குவிப்பதாக இருக்கிறது. இது மக்களை மேலும் மேலும் பொருளாதார அடிமைத்தனத்தில் தள்ளுகிறது.

    இந்த நிலை போக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் பொருளாதாரத்தில் நியாயமான பங்கும், வேலைவாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். இதற்கு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய மக்கள் உடைமை பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • 4. சாதி, மதம் போன்ற பிரிவினைகள் இன்றி மனிதன் 'மனிதனாக' வாழும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும்.
  • 5. போதை என்ற தீமையானது பல தீமைகளுக்கும் குற்றங்களுக்கும் மூல காரணமாக உள்ளது. எனவே டாஸ்மாக் மது, கஞ்சா உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும்.
  • 6. 'வளர்ச்சி' என்ற பெயரில் இயற்கை வளங்கள் வரைமுறையின்றி சூறையாடுவது தடுத்து நிறுத்தப்பட்டு நாட்டின் இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் முறையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அவற்றை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்.